செய்திகள்
சீர்காழியில் பிரியாணி கடையில் தகராறு செய்த வாலிபர் கைது
சீர்காழியில் பிரியாணி கடையில் தகராறு செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
சீர்காழி:
நாகை மாவட்டம் சீர்காழி பிடாரி வடக்கு வீதியை சேர்ந்தவர் குமார். இவர் சீர்காழியில் பிரியாணி கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு மேல்பாதி ஆற்றங்கரை தெருவை சேர்ந்த கலியபெருமாள் (30) என்பவர் நேற்று இரவு சென்று பிரியாணி சாப்பிட்டு விட்டு பாதி தொகையை மட்டும் கொடுத்து விட்டு மீதி தொகையை பின்னர் தருவதாக கூறியுள்ளார்.
இது தொடர்பாக குமாருக்கும், கலிய பெருமாளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதை தொடர்ந்து செத்த கோழியை வாங்கி குமார் பிரியாணி செய்வதாக வாடிக்கையாளர்களிடம் கலியபெருமாள் கூறியுள்ளார். இதுபற்றி குமார் சீர்காழி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சிங்காரவேல் வழக்குப்பதிவு செய்து கலியபெருமாளை கைது செய்தார்.