செய்திகள்

கோவை அருகே மூதாட்டியிடம் 4½ பவுன் செயின் பறிப்பு

Published On 2019-02-11 12:08 GMT   |   Update On 2019-02-11 12:08 GMT
கோவை அருகே மூதாட்டியிடம் 4½ பவுன் செயின் பறிப்பு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை:

கோவை புலியகுளத்தை சேர்ந்தவர் தாமோதரன். இவரது மனைவி இந்திரா (வயது67). நேற்று இரவு இவர் கார்மல் கார்டன் பள்ளி ரோட்டில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து 2 மர்மநபர்கள் வந்தனர். அவர்கள் மூதாட்டியின் அருகில் சென்று முகவரி கேட்டனர். அவர் சொல்லிக்கொண்டு இருக்கும் போது அவர் கழுத்தில் அணிந்து இருந்த 4½ தங்க செயினை பறித்து தப்பிச் சென்றனர்.

இதில் அதிர்ச்சியடைந்த இந்திரா இது குறித்து ராமநாதபுரம் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து செயினை பறித்துச் சென்ற மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News