செய்திகள்

கோவை அருகே மோட்டார் சைக்கிளை எரித்த வாலிபர் கைது

Published On 2019-02-11 09:18 GMT   |   Update On 2019-02-11 09:18 GMT
கோவை அருகே மோட்டார் சைக்கிளை எரித்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை:

கோவை ஆவாரம்பாளையம் அருகே உள்ள புராணி காலனியை சேர்ந்தவர் முஸ்தாக் அகமது (வயது 26). சம்பவத்தன்று இவர் குடிபோதையில் வந்து அவரது மனைவியிடம் தகராறு செய்து கொண்டு இருந்தார். இதனை பார்த்த பக்கத்து வீட்டில் வசித்து வரும் சுந்தர் கணேஷ் என்பவர் கணவன்-மனைவி ஆகியோரை சமாதம் செய்தார். இதனால் ஆத்திரம் அடைந்த முஸ்தாக் அகமது, சுந்தர் கணேசின் மோட்டார் சைக்கிளை தீ வைத்து எரித்து விட்டு தலைமறைவானார்.

இது குறித்து சுந்தர் கணேஷ் பீளமேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து முஸ்தாக் அகமதுவை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News