செய்திகள்
சத்தியமங்கலத்தில் இன்று 2 மணி நேரம் பெய்த மழை
சத்தியமங்கலத்தில் இன்று 2 மணி நேரம் தொடர்ந்து மழை பெய்தது.
சத்தியமங்கலம்:
ஈரோடு மாவட்டத்தில் கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக கடும் பனிப் பொழிவும், குளிரும், வாட்டி எடுத்து வருகிறது.
இந்த நிலையில் இன்று காலை சத்தியமங்கலம், பண்ணாரி, அத்தாணி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் அதிகாலை 4 மணிக்கு திடீர் மழை பெய்தது.
இந்த மழை தொடர்ந்து 6 மணி வரை 2 மணி நேரம் கொட்டியது. இந்த மழையால் ரோட்டில் மழை தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
இந்த திடீர் மழையால் சத்தியமங்கலம் பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பனி காலம் முடிந்து வெயில் அடிக்க ஆரம்பிக்கும் தருணத்தில் மழை பெய்தது. மக்களை குதூகலப்படுத்தி உள்ளது.