செய்திகள்
ராஜபாளையம் அருகே கள்ளச்சாராயம் காய்ச்சியவர் கைது
ராஜபாளையம் அருகே கள்ளச்சாராயம் காய்ச்சியவரை போலீசார் கைது செய்தனர்.
ராஜபாளையம்:
ராஜபாளையம் அருகே சுந்தரராஜபுரம் மேற்கு தொடர்ச்சிமலை அடிவார பகுதியில் கள்ளச்சாராயம் தயாரித்து விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜராஜன் உத்தரவின்பேரில் ராஜபாளையம் டி.எஸ்.பி. ரவிச்சந்திரன் ஆலோசனைப்படி சேத்தூர் புறக்காவல் போலீசார் மேற்கு தொடர்ச்சிமலை பகுதியில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
இன்ஸ்பெக்டர் குமரவேல் தலைமையில் போலீசார் மலைப்பகுதியில் உள்ள சின்னப்புல்பட்டி பகுதியில் ரோந்து சென்றபோது அங்கு கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இயைடுத்து போலீசார் கள்ளச்சாராயம் காய்ச்சிய கிருஷ்ணன்கோவில் கணபதிசுந்தரநாச்சியார் புரத்தைச் சேர்ந்த பொன் இருளப்பன் (வயது30) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 100 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.