செய்திகள்

இலங்கை சிறையில் இருந்த ராமேசுவரம் மீனவர்கள் 11 பேர் விடுதலை

Published On 2019-01-22 03:12 GMT   |   Update On 2019-01-22 03:12 GMT
இலங்கை சிறையில் இருந்த ராமேசுவரம் மீனவர்கள் 11 பேர் விடுதலை செய்யப்பட்டனர். அவர்கள் விரைவில் சொந்த ஊர் திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
ராமேசுவரம்:

ராமேசுவரத்தில் இருந்து கடந்த 13-ந்தேதி கடலுக்கு மீன்பிடிக்க சென்ற ஒரு படகையும், அதில் இருந்த 11 மீனவர்களையும் நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படையினர் சிறைபிடித்தனர். பின்னர் அவர்கள் ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் நேற்று அவர்கள் அனைவரும் மீண்டும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது நல்லெண்ண அடிப்படையில் 11 மீனவர்களையும் நீதிபதி விடுதலை செய்து உத்தரவிட்டார். அதனை தொடர்ந்து அவர்கள் அனைவரும் இலங்கையில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

ஏற்கனவே விடுதலை செய்யப்பட்ட 17 மீனவர்கள் இந்திய தூதரக அதிகாரிகளின் பாதுகாப்பில் உள்ளனர். தற்போது விடுவிக்கப்பட்டுள்ள 11 பேரையும் சேர்த்து 28 பேர் அங்கு உள்ளனர். அவர்கள் விரைவில் சொந்த ஊர் திரும்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tags:    

Similar News