செய்திகள்
கனவில் வேண்டுமானால் ஸ்டாலின் முதலமைச்சராகலாம் - எடப்பாடி பழனிசாமி பேச்சு
கனவில் வேண்டுமானால் ஸ்டாலின் முதலமைச்சராகலாம், எந்தக் காலத்திலும் முதல்வராக முடியாது என முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். #EdappadiPalanisamy #Stalin
நெல்லை:
நெல்லையில் எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் முதல்-அமைச்சர் பழனிசாமி இன்று பங்கேற்று பேசினார். அப்போது அவர் கூறியதாவது:
எம்.ஜி.ஆர் தமிழக தலைவர் மட்டுமல்ல, தேசிய தலைவர். எம்.ஜி.ஆர் காலத்தில் தான் தமிழகத்தில் நிறைய திட்டங்கள் கொண்டுவரப்பட்டன.
கல்வி, மருத்துவம், விளையாட்டு, மின்சாரம் உள்ளிட்ட துறைகளில் தமிழகம் சிறந்து விளங்குகிறது. காவிரி பிரச்னைக்காக சட்டப் போராட்டம் நடத்தி வெற்றி பெற்றது அதிமுக அரசு. ஜெயலலிதாவின் திட்டங்கள் அனைத்தும் உயிரோட்டம் உள்ளவை. யாராலும் அழிக்க முடியாது.
கோடநாடு விவகாரத்தில் தொடர்புடைய கூலிப்படையினருக்கு திமுகவை சேர்ந்த வழக்கறிஞர்கள் உதவுகின்றனர். கனவில் வேண்டுமானால் ஸ்டாலின் முதலமைச்சராகலாம். எந்தக் காலத்திலும் முதல்வராக முடியாது.
இவ்வாறு அவர் கூறினார். #EdappadiPalanisamy #Stalin