செய்திகள்

பாராளுமன்ற தேர்தல் - கூட்டணி உடன்பாடு பேச, தேர்தல் அறிக்கை தயாரிக்க திமுகவில் குழுக்கள் அமைப்பு

Published On 2019-01-20 14:09 GMT   |   Update On 2019-01-20 14:09 GMT
பாராளுமன்ற தேர்தலில் தொகுதி உடன்பாடு தொடர்பாக கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தவும் தேர்தல் அறிக்கை தயாரிக்கவும் குழுக்களை நியமித்து திமுக பொதுச்செயலாளர் க. அன்பழகன் இன்று அறிவித்துள்ளார். #DMK #ParliamentElection
சென்னை:

பாராளுமன்ற தேர்தலுக்கான தேதிகள் வரும் மார்ச் மாதம் முதல் வாரத்தில் அறிவிக்கப்படவுள்ள நிலையில் அனைத்து கட்சிகளும் தேர்தலை சந்திக்க சுறுசுறுப்பாகி வருகின்றன.

இந்நிலையில், பாராளுமன்ற தேர்தலில் தொகுதி உடன்பாடு தொடர்பாக கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த 6 பேர் கொண்ட குழுவை நியமித்து திமுக பொது செயலாளர் க.அன்பழகன் உத்தரவிட்டுள்ளார்.



திமுக பொருளாளர் துரைமுருகன் தலைமையில் இ.பெரியசாமி, ஆர்.எஸ்.பாரதி, கே.என்.நேரு, க.பொன்முடி, எ.வ.வேலு ஆகியோர் இக்குழுவில் இடம்பெற்றுள்ளனர்.

இதேபோல், தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக 8 பேர் கொண்ட குழுவும் நியமிக்கப்பட்டுள்ளது. டி.ஆர். பாலு, சுப்புலட்சுமி ஜெகதீசன், வி.பி.துரைசாமி, கனிமொழி, திருச்சி சிவா, ஆ.ராசா, டி.கே.எஸ். இளங்கோவன் மற்றும் ராமசாமி ஆகியோர் இந்த குழுவில் இடம் பெற்றுள்ளனர். #DMK #ParliamentElection
Tags:    

Similar News