செய்திகள்

கொளத்தூரில் மூதாட்டியிடம் நகை பறிப்பு

Published On 2019-01-19 06:00 GMT   |   Update On 2019-01-19 06:00 GMT
கொளத்தூரில் மூதாட்டியிடம் நகை பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மாதரவம்:

கொளத்தூர் அஞ்சுகம் நகர் பிரதான சாலையில் வசித்து வருபவர் ஜம்புலிங்கம். இவரது மனைவி வசந்தா (வயது 65) இவர் இன்று அதிகாலை வீட்டின் கதவைத் திறந்து வெளியேவந்த போது மர்ம ஆசாமிகள் வசந்தா கழுத்தில் இருந்த 10 பவுன் தாலி செயினை பறித்து கொண்டு தப்பி ஓடிவிட்டனர்.

இது குறித்து கொளத்தூர் போலீசில் புகார் தெரிவித்தனர் புகாரின்பேரில் கொளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர் அதிகாலையில் இதுபோன்ற சம்பவங்கள் இப்பகுதியில் நடை பெறுவதால் பெண்கள் வெளியில் வருவதற்கு அச்சப்படுவதாக தெரிவித்தனர்.

Tags:    

Similar News