செய்திகள்

கூடலூரில் வாலிபரை பீர் பாட்டிலால் குத்தியவர் கைது

Published On 2019-01-18 12:29 GMT   |   Update On 2019-01-18 12:29 GMT
தேனி மாவட்டம் கூடலூரில் வாலிபரை பீர் பாட்டிலால் குத்தியவர் கைது செய்யப்பட்டார்.

தேனி:

தேனி மாவட்டம் கூடலூர் காமாட்சியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மணிகண்ட ஹரிஹரன் (வயது 20). இவர் சம்பவத்தன்று தனது நண்பர் ஸ்டாலினுடன் அரசமர பஸ் ஸ்டாப் அருகே நின்று கொண்டு இருந்தார். அப்போது பூச்சி தேவர் சந்து பகுதியைச் சேர்ந்த விஜய் (21) அங்கு போதையில் வந்தார். அவர் ஸ்டாலினிடம் பணம் கேட்டு தகராறு செய்தார்.

இதனை ஹரிஹரன் தட்டிக் கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த விஜய் அருகில் இருந்த பீர் பாட்டிலை உடைத்து அவரது வயிற்றில் குத்தினார். மேலும் கொலை மிரட்டல் விடுத்து விட்டு தப்பி ஓடி விட்டார்.

படுகாயமடைந்த ஹரிஹரன் தேனி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இது குறித்து கூடலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் விஜயை கைது செய்தனர்.

Tags:    

Similar News