செய்திகள்
பாப்பநாயக்கன் பாளையம் அருகே இளம்பெண் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாப்பநாயக்கன் பாளையம் மாரியம்மன்கோவில் தெருவை சேர்ந்தவர் தியாகராஜன். இவரது மனைவி அனிதா மகேஸ்வரி(வயது 29). நேற்று வீட்டில் மகேஸ்வரி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். புகாரின்பேரில் சம்பவ இடத்துக்கு போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
குடும்ப பிரச்சினை காரணமாக அனிதா மகேஸ்வரி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.