செய்திகள்

பக்ரைன் விமானத்தில் சென்னை பெண் மாரடைப்பால் மரணம்

Published On 2019-01-17 07:25 GMT   |   Update On 2019-01-17 07:25 GMT
பக்ரைன் விமானத்தில் பயணம் செய்த சென்னை பெண் மாரடைப்பால் மரணமடைந்தார். இதுகுறித்து விமான நிலைய போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
ஆலந்தூர்:

சென்னை, மடிப்பாக்கத்தை சேர்ந்தவர் வசந்தா (வயது 60). இவர் பக்ரைனில் உள்ள மகனை சந்திக்க கடந்த சில மாதங்களுக்கு முன்பு சென்றார்.

இந்த நிலையில் நேற்று இரவு அவர் சென்னை திரும்புவதற்காக விமானத்தில் வந்தார்.

அதிகாலை 3 மணி அளவில் நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்த போது வசந்தாவுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. அவருக்கு விமான பெண்கள் முதல் உதவி சிகிச்சை அளித்தனர். சிறிது நேரத்தில் வசந்தா மயங்கினார்.

இதற்கிடையே விமானம் சென்னையில் தரையிறங்கியது. தயாராக இருந்த மருத்துவ குழுவினர் வசந்தாவை மீட்டு பரிசோதித்தனர். அவர் ஏற்கனவே மாரடைப்பால் இறந்து விட்டதாக தெரிந்தது.

இதையடுத்து அவரது உடல் குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து விமான நிலைய போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
Tags:    

Similar News