செய்திகள்
பூந்தமல்லியில் நாளை எம்ஜிஆர் பிறந்த நாள் பொதுக்கூட்டம்- முதல்வர் பழனிசாமி பங்கேற்பு
பூந்தமல்லியில் நாளை நடைபெற உள்ள எம்.ஜி.ஆர்.பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்கிறார்.
பூந்தமல்லி:
திருவள்ளூர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நாளை (வெள்ளிக்கிழமை) மாலை எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பூந்தமல்லி காட்டுப்பாக்கத்தில் நடைபெறுகிறது.
திருவள்ளூர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் சிறுணியம் பி. பலராமன் எம்.எல்.ஏ தலைமை தாங்குகிறார். ஒன்றிய செயலாளர்கள் ஜி.திருநாவுக்கரசு, புட்லூர் சந்திரசேகர், ரவிசந்திரன், நகர செயலாளர் டி.தேவேந்திரன், ஒன்றிய துணை செயலாளர் க.வைதியநாதன் முன்னிலை வகிக்கிறார்கள். கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.
திருவள்ளூர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் நாளை (வெள்ளிக்கிழமை) மாலை எம்.ஜி.ஆரின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா பூந்தமல்லி காட்டுப்பாக்கத்தில் நடைபெறுகிறது.
திருவள்ளூர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் சிறுணியம் பி. பலராமன் எம்.எல்.ஏ தலைமை தாங்குகிறார். ஒன்றிய செயலாளர்கள் ஜி.திருநாவுக்கரசு, புட்லூர் சந்திரசேகர், ரவிசந்திரன், நகர செயலாளர் டி.தேவேந்திரன், ஒன்றிய துணை செயலாளர் க.வைதியநாதன் முன்னிலை வகிக்கிறார்கள். கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.