ராஜபாளையம் அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் பேராசிரியர் பலி
ராஜபாளையம்:
ராஜபாளையம திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் சீனி. இவரது மகன் கிருஷ்ணராஜ் (வயது 28). சென்னையில் தனியார் கல்லூரியில் பேராசிரியராக பணியாற்றினார்.
பொங்கல் விடுமுறைக்காக கிருஷ்ணராஜ் ஊருக்கு வந்தார். அவரை பார்க்க நண்பர் பிரதீப் (25) வீட்டுக்கு வந்தார்.
பின்னர் பிரதீப்பை முறம்பு பகுதியில் உள்ள அவரது வீட்டில் விடுவதற்காக கிருஷ்ணராஜ் மோட்டார் சைக்கிளில் சென்றார். சங்கரன்கோவில் சாலையில் கோதைநாச்சியார்புரம் பஸ் நிறுத்தம் அருகே சென்றபோது எதிரே வந்த கார் மோதியது.
இந்த விபத்தில் 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் பலத்த காயம் அடைந்த கிருஷ்ணராஜ் சம்பவ இடத்திலேயே பலியானார். பிரதீப் காயத்துடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
விபத்து தொடர்பாக ராஜபாளையம் தெற்கு போலீசில் கிருஷ்ணராஜின் தந்தை சீனி புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் மாரியப்பன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.
தொடர்ந்து காரை ஓட்டி வந்த தென்காசி அருகே உள்ள சுந்தரபாண்டியபுரத்தை சேர்ந்த முருகேசன் (28) என்பவர் கைது செய்யப்பட்டார்.