செய்திகள்

மதுரை அருகே விளாச்சேரியில் வாலிபர் சரமாரி வெட்டிக்கொலை - 2 பேர் கைது

Published On 2019-01-16 12:06 GMT   |   Update On 2019-01-16 12:06 GMT
மதுரை அருகே விளாச்சேரியில் வாலிபர் சரமாரி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

பேரையூர்:

மதுரை அருகே உள்ள விளாச்சேரி ஆதிசிவன் நகரைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மனைவி காந்திமதி. இவர்களது மகன் கவுதமன் (வயது 30). இவருக்கும், மொட்டமலை கலைஞர் நகரைச் சேர்ந்த சேதுபிரசாத் (25) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் இவர்களுக்குள் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டது.

இந்த நிலையில் கவுதமன் நேற்று மொட்டைமலை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடைக்குச் சென்றார். அங்கு மது அருந்திவிட்டு வெளியே வந்தபோது சேதுபிரசாத், அவரது நண்பர் கரண்ராஜா (19) ஆகியோர் கவுதமனிடம் மீண்டும் தகராறு செய்தனர்.

இதில் வாக்குவாதம் முற்றவே போதையில் இருந்த கவுதமனை இருவரும் சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் படுகாயம் அடைந்த கவுதமன் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இது குறித்து தகவல் அறிந்த ஆஸ்டின்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசக்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கவுதமனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொலை தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் சேது பிரசாத்தையும், கரண் ராஜாையும் கைது செய்தனர்.

சேதுபிரசாத்தின் அண்ணன் 2 வருடங்களுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார். இதற்கு கவுதமன் தான் காரணம் எனக்கருதி பழிக்குப்பழி வாங்கும் நோக்கத்தில் சேதுபிரசாத், தனது நண்பருடன் சேர்ந்து இந்த செயலில் ஈடுபட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.

Tags:    

Similar News