செய்திகள்

பெரம்பலூரில் தே.மு.தி.க. நிர்வாகிகள் ஆய்வு கூட்டம்

Published On 2019-01-13 13:43 GMT   |   Update On 2019-01-13 13:43 GMT
பெரம்பலூர் மாவட்ட தே.மு.தி.க. சார்பில் மாநில சார்பு அணி நிர்வாகிகள் ஆய்வு கூட்டம் பெரம்பலூர் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது.

பெரம்பலூர்:

பெரம்பலூர் மாவட்ட தே.மு.தி.க. சார்பில் மாநில சார்பு அணி நிர்வாகிகள் ஆய்வு கூட்டம் பெரம்பலூர் மாவட்ட அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் துரை.காமராஜ் தலைமை வகித்தார். மாநில இளைஞரணி செயலாளர் நல்லதம்பி, மாநில மகளிர் அணி செயலாளர் மாலதி, மாநில வழக்கறிஞர் அணி செயலாளர் பன்னீர்செல்வம், மாநில நெசவாளர் அணி செயலாளர் கோதை மாரியப்பன், மற்றும் அந்தந்த அணி நிர்வாகிகள் துணைச் செயலாளர்கள் கலந்து கொண்டு பெரம்பலூர், மாவட்ட , ஒன்றிய, நகர, பேரூராட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆய்வுகள் மேற் கொண்டனர்.

நிர்வாகிகளிடம் கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்து ஆலோசனை வழங்கினர். கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் கண்ணுசாமி, பெரம்பலூர் நகர செயலாளர் ஜெயக்குமார், ஒன்றிய செயலாளர்கள் தவசி அன்பழகன், சிவா அய்யப்பன், மலர்மன்னன், பொன் சாமிதுரை, மாவட்ட துணை செயலாளர் சங்கர், மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News