கோவை:
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியை சேர்ந்தவர் பாலமுருகன்(வயது 26). இவர் கோவையில் உள்ள ஒரு கலை கல்லூரியில் இரண்டாமாண்டு படித்து வந்தார்.
வெரைட்டிஹால் ரோட்டில் உள்ள லாட்ஜ் ஒன்றில் தங்கி கல்லூரிக்கு சென்று வந்த இவர் பகுதி நேரமாக ஆர்.எஸ்.புரத்தில் உள்ள ஓட்டலில் வேலை பார்த்தும் வந்தார். நேற்று இவரது அறைக்கதவு வெகுநேரமாகியும் திறக்கப்படவில்லை.
இதனால் சந்தேமதடைந்த லாட்ஜ் ஊழியர்கள் கதவை தட்டினர். அதன்பிறகும் கதவு திறக்கப்படவில்லை. இதையடுத்து கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு பாலமுருகன் விஷம் குடித்து தற்கொலை செய்த நிலையில் பிணமாக கிடந்தார்.
இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. சம்பவஇடத்துக்கு இன்ஸ்பெக்டர் தெய்வேந்திரன் மற்றும் போலீசார் விரைந்து சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அறையில் பாலமுருகன் எழுதி வைத்திருந்த ஒரு கடிதத்தை போலீசார் கைப்பற்றினர்.
அதில், எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை. வாழ்க்கையில் முன்னேற்றம் இல்லாததால் தற்கொலை செய்து கொள்கிறேன் என எழுதி இருந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.