செய்திகள்

வேலாயுதம்பாளையம் அருகே மணல் கடத்திய 2 பேர் கைது

Published On 2019-01-11 11:31 GMT   |   Update On 2019-01-11 11:31 GMT
வேலாயுதம்பாளையம் அருகே மணல் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலாயுதம்பாளையம்:

கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த ஆம்னிகாரை நிறுத்தி சோதனை செய்த போது அதில் மணல் மூட்டைகள் இருந்தது. மணல் மூட்டைகள் கொண்டு வருவதற்கான அனுமதி சீட்டை கேட்டனர். அப்போது காவிரி ஆற்று பகுதியில் திருட்டுத்தனமாக மணல் அள்ளி கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து புஞ்சை கடம்பன்குறிச்சியை சேர்ந்த சசிகுமார் (34), கேசவன் (29) ஆகியோரை போலீசார் கைது செய்து, ஆம்னி காரை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News