செய்திகள்

எம்ஜிஆரின் 102வது பிறந்தநாள்- தமிழகம் முழுவதும் மூன்று நாட்கள் அதிமுக பொதுக்கூட்டம்

Published On 2019-01-11 10:18 GMT   |   Update On 2019-01-11 10:18 GMT
எம்ஜிஆரின் 102-வது பிறந்தநாளை முன்னிட்டு, அதிமுக சார்பில் தமிழகம் முழுவதும் 18-ம் தேதி முதல் 3 நாட்கள் பொதுக்கூட்டங்கள் நடைபெற உள்ளன. #MGRBirthday #ADMKMeetings
சென்னை:

அதிமுக கொள்கை பரப்பு செயலாளர் மு.தம்பிதுரை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம்; கழக இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழ்நாடு முதலமைச்சருமான எடப்பாடி கே. பழனிசாமி ஆகியோரது அறிவிப்பிற்கிணங்க, டாக்டர் எம்.ஜி.ஆரின் 102-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, 18.1.2019 - வெள்ளிக்கிழமை முதல் 20.1.2019 ஞாயிற்றுக்கிழமை வரை மூன்று நாட்கள், புரட்சித் தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் 102-ஆவது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டங்கள், அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும்; கழக அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கும் புதுச்சேரி, கர்நாடகா, ஆந்திரா, கேரளா மற்றும் அந்தமான் உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் நடைபெற உள்ளன.



பொதுக்கூட்டங்கள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ள இடங்கள்; அவற்றில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றுவோர் விபரங்கள் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

மாவட்டக் கழகச் செயலாளர்கள் தங்கள் மாவட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ள பொதுக்கூட்ட நிகழ்ச்சிகளை, கட்சி நிர்வாகிகள் மற்றும் கட்சியின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளுடன் இணைந்து, சிறப்புப் பேச்சாளர்கள் மற்றும் கலைக் குழுவினருடன் தொடர்புகொண்டு, புரட்சித் தலைவரின் 102-ஆவது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டங்களை ஏற்பாடு செய்து சிறப்பாக நடத்தும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார். #MGRBirthday #ADMKMeetings
Tags:    

Similar News