செய்திகள்

பெரியநாயக்கன்பாளையத்தில் காதல் திருமணம் செய்த வாலிபர் தற்கொலை

Published On 2019-01-11 10:13 GMT   |   Update On 2019-01-11 10:13 GMT
பெரியநாயக்கன்பாளையத்தில் காதல் திருமணம் செய்த வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கவுண்டம்பாளையம்:

கோவை பெரியநாயக்கன்பாளையம் கென்னடி நகரை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் சிவசங்கர் (வயது 30). பெயிண்டர். இவர் பூர்ணிமா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்தார். 11 வயதில் ஒரு மகன் உள்ளார். கடந்த சில நாட்களாகவே சரியாக வேலை கிடைக்காமல் வீட்டில் இருந்தார். இதனால் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் மனம் உடைந்த சிவசங்கர் சம்பவத்தன்று வி‌ஷம் குடித்தார்.

சிறிது நேரத்தில் வயிற்று வலி தாங்க முடியாமல் சிவங்கர் அலறி சத்தம் போட்டார். அதிர்ச்சியடைந்த உறவினர்கள் சிவசங்கரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று சிவசங்கர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News