செய்திகள்

கிராம சபை கூட்டம் மூலம் மக்கள் பாரத்தை நாங்கள் வாங்கி கொள்கிறோம் - துரைமுருகன் பேச்சு

Published On 2019-01-11 05:59 GMT   |   Update On 2019-01-11 05:59 GMT
கிராம சபை கூட்டம் மூலம் மக்கள் பாரத்தை எங்கள் மீது இறக்கி வைத்து விட்டீர்கள். உங்கள் பாரத்தை நாங்கள் சுமப்போம், குறைகளை தீர்ப்போம் என்று தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் கூறினார். #DuraiMurugan #DMK
பவானி:

ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த எலவமலை ஊராட்சி மூலப்பாளையத்தில் தி.மு.க. சார்பில் கிராம சபை கூட்டம் நடந்தது. முன்னாள் அமைச்சரும் ஈரோடு தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளருமான முத்துசாமி தலைமை தாங்கி பேசினார்.

கூட்டத்தில் தி.மு.க. பொருளாளர் துரைமுருகன் மற்றும் முன்னாள் மத்திய மந்திரி தயாநிதிமாறனும் கலந்து கொண்டனர். கூட்டத்தில் துரைமுருகன் பேசியதாவது.-

உங்களையெல்லாம் நேரில் சென்று பார்த்து குறைகளை கேட்டறிய தளபதி ஸ்டாலின் அனுப்பி வைத்துள்ளார். எம்.எல்.ஏ.வாக இருப்பவர்கள் மக்களை சந்தித்து குறைகளை கண்டறிந்து தீர்க்க வேண்டும். ஆனால் வரவில்லை. எங்களுக்கு ஓட்டு போட்டாலும் போடா விட்டாலும் உங்களுக்காக உழைக்கின்ற கட்சி தி.மு.க.தான்.

நீங்கள் கொடுத்த மனுக்களை ஜெராக்ஸ் எடுத்து தலைமை கழகத்துக்கு ஒன்று அனுப்பி வைப்போம். மற்றொன்றை அதிகாரிகளிடம் சென்று கொடுப்போம்.

10 பேருக்கு கொடுத்து 6 பேருக்கு கிடைத்தால் கூட போதும் என்று நீங்கள் (மக்கள்) பாரத்தை எங்கள் மீது இறக்கி வைத்து விட்டீர்கள். உங்கள் பாரத்தை நாங்கள் சுமப்போம். குறைகளை தீர்ப்போம்.

இவ்வாறு துரைமுருகன் கூறினார்.

கூட்டத்தில் ஒன்றிய செயலாளர் சதாசிவம் கட்சி பொறுப்பாளர்கள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். #DuraiMurugan #DMK

Tags:    

Similar News