செய்திகள்

திருமணமான ஒரு மாதத்தில் புதுப்பெண் தற்கொலை

Published On 2019-01-09 18:24 GMT   |   Update On 2019-01-09 18:24 GMT
திருமணமான ஒரு மாதத்தில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கோவை:

கோவை ஆடீஸ் வீதியை சேர்ந்தவர் கணேஷ்குமார், தனியார் நிறுவன ஊழியர். இவருடைய மனைவி மாரிசெல்வி (வயது 24). இவர்களுக்கு ஒரு மாதத்துக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த நிலையில் மாரிசெல்வி நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்துக்கு இன்ஸ்பெக்டர் தெய்வசிகாமணி மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். போலீசார் வீட்டில் சோதனை நடத்திய போது மாரிசெல்வி எழுதி வைத்திருந்த ஒரு கடிதத்தை கைப்பற்றினர். அதில், ‘தனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை’ என மாரிசெல்வி எழுதி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

மாரிசெல்வி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். திருமணமாகி ஒரு மாதத்தில் புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டதால் ஆர்.டி.ஓ. விசாரணையும் நடந்து வருகிறது.
Tags:    

Similar News