செய்திகள்

காணை அருகே தொழிலாளி வீட்டில் 8½ பவுன் நகை திருட்டு

Published On 2019-01-09 17:51 GMT   |   Update On 2019-01-09 18:09 GMT
காணை அருகே தொழிலாளி வீட்டில் புகுந்த மர்ம நபர்கள் வீட்டின் பீரோவை உடைத்து 8½ பவுன் நகையை திருடி சென்றனர்.
விழுப்புரம்:

காணை அருகே உள்ள ஆரியூர் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது 39), செங்கல் சூளை தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் தனது வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் அதே கிராமத்தில் செங்கல் சூளைக்கு வேலைக்கு சென்று விட்டார். பின்னர் வேலை முடிந்ததும் மாலையில் மணிகண்டன் குடும்பத்தினர் வீட்டிற்கு சென்றனர்.

அப்போது வீட்டின் முன்பக்க கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு திடுக்கிட்டனர். உடனே வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்ட நிலையில், அதில் வைத்திருந்த 8½ பவுன் நகையை காணவில்லை. மணிகண்டன் குடும்பத்தினர் வேலைக்கு சென்றதை நோட்டமிட்டு மர்மநபர்கள், கதவு பூட்டை உடைத்து உள்ளே புகுந்து நகையை திருடிச்சென்றிருப்பது தெரியவந்தது. திருட்டுப்போன நகையின் மதிப்பு ரூ.1¾ லட்சமாகும். இதுகுறித்த புகாரின்பேரில் காணை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News