செய்திகள்

தேனி அருகே அழகு நிலையத்தில் பெண்ணிடம் நகை கொள்ளை

Published On 2019-01-09 10:04 GMT   |   Update On 2019-01-09 10:04 GMT
தேனி அருகே அழகு நிலையத்தில் பெண்ணிடம் நகையை கொள்ளையடித்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

தேனி:

தேனி அருகே பழனிசெட்டி பட்டி பழனியப்பா தெருவை சேர்ந்தவர் அகிலா(வயது22). இவர் அதேபகுதியை சேர்ந்த முருகேசன் மனைவி செல்வக்குமாரி என்பவரது அழகுநிலையத்திற்கு சென்றார்.

அங்கு தனது 5 பவுன் தங்கச்சங்கிலியை கழற்றி வைத்துவிட்டு முகஅலங்காரம் செய்து கொண்டிருந்தார். திரும்ப வந்து பார்த்தபோது சங்கிலி மாயமாகி இருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

செல்வக்குமாரியிடம் கேட்டபோது தனக்கு தெரியாது என கூறியுள்ளார். இதுகுறித்து பழனிசெட்டிபட்டி போலீசில் அகிலா அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தியதில் செல்வக்குமாரி தங்கச்சங்கிலியை திருடியது தெரியவந்தது.

இதனைதொடர்ந்து அவரை கைது செய்து அவரிடமிருந்த சங்கிலியை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News