செய்திகள்

திருவண்ணாமலை அருகே கட்டிட மேஸ்திரி வீட்டில் நகை, பணம் திருட்டு

Published On 2019-01-05 17:59 GMT   |   Update On 2019-01-05 17:59 GMT
திருவண்ணாமலை அருகே கட்டிட மேஸ்திரி வீட்டில் நகை, பணம் திருடி சென்றவரை போலீசார் தேடி வருகின்றனர்.
திருவண்ணாமலை:

திருவண்ணாமலையை அடுத்த சேரியந்தல் கிராமத்தை சேர்ந்தவர் இளவரசன் (வயது 35), கட்டிட மேஸ்திரி. இவர் நேற்று முன்தினம் இரவு தனது வீட்டை பூட்டிவிட்டு அதே பகுதியில் உள்ள உறவினர் வீட்டில் தங்கினார். நேற்று காலை 6 மணிக்கு வீட்டுக்கு திரும்பி வந்தார். அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். வீட்டினுள் சென்று பார்த்தபோது பீரோ திறந்து கிடந்தது. அதில் வைத்திருந்த 4 பவுன் நகை, ரூ.21 ஆயிரத்தை மர்ம நபர்கள் திருடி சென்றிருப்பது தெரியவந்தது.

இதுகுறித்து திருவண்ணாமலை கிழக்கு போலீசில் இளவரசன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News