செய்திகள்

ஊத்துக்கோட்டை அருகே ஆட்டோ மீது கார் மோதல்- 12 பேர் படுகாயம்

Published On 2019-01-05 07:29 GMT   |   Update On 2019-01-05 07:29 GMT
ஊத்துக்கோட்டை அருகே ஆட்டோ மீது கார் மோதிய விபத்தில் 12 பேர் படுகாயமடைந்தனர். படுகாயம் அடைந்தவர்கள் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
ஊத்துக்கோட்டை:

ஊத்துக்கோட்டையை அடுத்த ஆலபாக்கம் கிராமத்தை சேர்ந்த நரேஷ். ஆட்டோ ஓட்டி வருகிறார். இவர் ஆட்டோவில் திருவள்ளூரில் இருந்து ஊத்துக்கோட்டைக்கு சென்றார். அதில் 9 பேர் பயணம் செய்தனர்.

ஊத்துக்கோட்டை அருகே ஒதப்பை பகுதியில் சென்ற போது எதிரே வந்த கார் ஒன்று திடீரென கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோ மீது மோதி கவிழ்ந்தது.

கார் மோதிய வேகத்தில் ஆட்டோ கவிழ்ந்தது. இந்த விபத்தில் ஆட்டோ டிரைவர் நரேஷ், ஆட்டோவில் பயணம் செய்த பூண்டி அருகே உள்ள மயிலாப்பூரை சேர்ந்த நதியா, இவரது மகள் ஹர்‌ஷவர்தினி, தாஸ், நாகசுந்தரி, காட்டம்மாள், ரித்விக், சேகர், செல்வம், கோவர்தன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அதே போல் காரில் பயணம் செய்த 2 பேரும் படுகாயம் அடைந்தனர்.

தகவல் அறிந்ததும் பென்னாலூர்பேட்டை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்த 12 பேரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். விபத்து காரணமாக ஊத்துக்கோட்டை திருவள்ளூர் இடையே சுமார் அரை மணி நேரம் வாகன போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News