செய்திகள்

தேனி அருகே மின் மோட்டார்கள், வாழைத்தார் திருடிய கும்பல்

Published On 2019-01-04 11:15 GMT   |   Update On 2019-01-04 11:15 GMT
தேனி அருகே மின் மோட்டார்கள் மற்றும் வாழைத்தார் திருடிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

தேனி:

தேனி அருகே பூதிப்புரம், சுப்பிரமணியர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மூர்த்தி (வயது 36). அதே பகுதியில் புதிதாக வீடு கட்டி வருகிறார். சம்பவத்தன்று அங்கு இருந்த மின் மோட்டாரை 2 பேர் திருடிச் சென்றுள்ளனர். இது குறித்து பழனிசெட்டிபட்டி போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் விசாரணையில் மின் மோட்டாரை திருடியது சீப்பாலக்கோட்டையைச் சேர்ந்த ராமச்சந்திரன் (32), பெருமாள் கோவில் பட்டியைச் சேர்ந்த நிஜந்தன் (26) என தெரிய வந்தது. போலீசார் அவர்களை கைது செய்தனர்.

சின்னமனூர் ஷேக் மைதீன் தெருவைச் சேர்ந்தவர் ராமையா மனைவி ஜெயபாரதி (60). லட்சுமி நகர் பகுதியில் புதிதாக வீடு கட்டி வருகிறார். அங்கிருந்த மின் மோட்டார் மற்றும் 40 அடி மின் வயரை மர்ம நபர்கள் திருடிச் சென்றுள்ளனர்.

இது குறித்து சின்னமனூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

சின்னமனூர் அருகே முத்துலாபுரம் சின்ன ராமகவுண்டன்பட்டியைச் சேர்ந்த தங்கவேல் (40). அதே பகுதியில் வாழைத்தோட்டம் வைத்துள்ளார். சம்பவத்தன்று இங்கு புகுந்த மர்ம நபர்கள் 10 வாழைத்தார்களை வெட்டி கடத்திச் சென்றனர்.இது குறித்து சின்னமனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News