செய்திகள்

வாழப்பாடி- கொளத்தூர் பகுதியில் நாளை மின்நிறுத்தம்

Published On 2019-01-02 11:25 GMT   |   Update On 2019-01-02 11:25 GMT
வாழப்பாடி- கொளத்தூர் நாளை பராமரிப்பு பணி நடைபெறுவதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

சேலம்:

சேலம் மாவட்டம் கொளத்தூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது.

எனவே அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கொளத்தூர், பெரியதண்டா, நீதிபுரம், காவேரிபுரம், சின்னதண்டா, கண்ணா மூச்சி, கோவிந்தபாடி, தின்னப்பட்டி, பாலமலை, ஐயம்புதூர், ஆலமரத்துப் பட்டி, சுப்பிரமணியபுரம், பண்ண வாடி, குரும்பனூர், சவுரியார் பாளையம், மூலக்காடு, மாசிலா பாளையம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் மின்சாரம் நிறுத்தப்படுகிறது.

இந்த தகவலை மேட்டூர் அணை மின் வாரிய செயற்பொறியாளர் சேகரன் தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் வாழப்பாடி கோட்டம், தும்பல் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (வியாழக்கிழமை) நடைபெற உள்ளது.

ஆகவே அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை தும்பல், பனைமடல், எடப்பட்டி, மாமாஞ்சி, சேலூர், பாப்பநாயக்கன் பட்டி, வெள்ளாளப் பட்டி, செக்கடிப்பட்டி, தாண்டானூர், ஈச்சங்காடு, மண்ணூர், கருமந்துறை, யு.குமாரபாளையம், கலக்காம்பாடி, பகடுப்பட்டு, குண்ணூர், மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் மின் விநியோகம் இருக்காது.

இந்த தகவலை வாழப்பாடி மின்வாரிய செயற்பொறியாளர் சங்கர சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News