செய்திகள்

புதுவை அருகே புத்தாண்டு கொண்டாட்டத்தில் மோதல்- 3 பேர் கைது

Published On 2019-01-02 10:06 GMT   |   Update On 2019-01-02 10:06 GMT
புதுவை அருகே புத்தாண்டு கொண்டாட்டத்தில் மோதலில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

சேதராப்பட்டு:

புதுவையை அடுத்த தமிழக பகுதியான பெரிய முதலியார் சாவடியில் தனியார் விருந்தினர் விடுதி உள்ளது. அங்கு புத்தாண்டு கொண்டாடுவதற்கு பல பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்திருந்தனர்.

அதில், ஒரு விடுதியில் கேரள வாலிபர்கள் புத்தாண்டு கொண்டாடி விட்டு வெளியே வந்தனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த 3 பேர் அவர்களிடம் மோதலில் ஈடுபட்டு தகாத வார்த்தைகளால் திட்டினர். வழிப்பறியிலும் ஈடுபட்டனர்.

இதுகுறித்து கோட்டக்குப்பம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் திருமணி மற்றும் போலீசார் விசாரித்தனர். கேரள வாலிபர்களிடம் தகராறில் ஈடுபட்டது பெரிய முதலியார் சாவடியை சேர்ந்த பாலச்சந்தரன் (வயது 20), காளிமுத்து (22), அப்துல்லத்தீப் (20) என்பது தெரிய வந்தது.

போலீசார் வழக்கு பதிவு செய்து 3 பேரையும் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News