செய்திகள்

சிங்கை, பணகுடி பகுதிகளில் மின்தடை

Published On 2018-12-31 10:32 GMT   |   Update On 2018-12-31 10:32 GMT
சிங்கை,பணகுடி பகுதிகளில் பராமரிப்பு பணி நடைபெறுவதால் மின் வினியோகம் இருக்காது.

சிங்கை:

விக்கிரமசிங்கபுரம் துணை மின்நிலையத்தில் வருகிற 2-ந் தேதி (புதன்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கின்றன. எனவே அங்கிருந்து மின்வினியோகம் பெறும் விக்கிரமசிங்கபுரம், பாபநாசம், சிவந்திபுரம், சேர்வலாறு, ரவணசமுத்திரம், ஜமீன்சிங்கம்பட்டி, ஆழ்வார்குறிச்சி, பொட்டல்புதூர், மாஞ்சோலை, மணிமுத்தாறு, ஆலடியூர், ஆம்பூர், பாப்பான்குளம், அடையகருங்குளம் ஆகிய பகுதிகளுக்கு அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது. இந்த தகவலை, கல்லிடைக்குறிச்சி மின்வினியோக செயற்பொறியாளர் புலமாடன் தெரிவித்துள்ளார்.

இதேபோல் நாங்குநேரி (ஏ.எம்.ஆர்.எல்) துணை மின்நிலையத்தில் வருகிற 2-ந் தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. எனவே அங்கிருந்து மின்வினியோகம் பெறும், ராஜாக்கள்மங்கலம், சிறுமளஞ்சி, பெருமளஞ்சி கீழூர், பெருமளஞ்சி மேலூர், ஆச்சியூர், வாகைகுளம், கோவநேரி, ஏ.எம்.ஆர்.எல். தொழிற்கூடம் மற்றும் பக்கத்து கிராமங்களுக்கும் அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது என்று வள்ளியூர் மின்வினியோக செயற்பொறியாளர் ராஜன்ராஜ் தெரிவித்துள்ளார்.

பணகுடி துணை மின்நிலையத்தில் வருகிற 3-ந் தேதி (வியாழக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன. எனவே அங்கிருந்து மின்வினியோகம் பெறும் பணகுடி, காவல்கிணறு, சிவகாமிபுரம், ரோஸ்மியா புரம், தளவாய்புரம், தண்டையார்குளம், கும்பிகுளம், மருதப்பபுரம், பாம்பன்குளம், கலந்தபனை, தெற்கு வள்ளியூர், டி.பி. ரோடு, நம்பியான்விளை மற்றும் பக்கத்து கிராமங்களுக்கு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.

Tags:    

Similar News