செய்திகள்

ஊத்துக்குளியில் அடுத்தடுத்து 3 கடைகளில் பூட்டை உடைத்து திருட்டு

Published On 2018-12-31 09:56 GMT   |   Update On 2018-12-31 09:56 GMT
ஊத்துக்குளியில் அடுத்தடுத்து 3 கடைகளில் பொருட்கள் திருட்டு போனது.

திருப்பூர்:

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே உள்ள கூலிப்பாளையம் நால் ரோட்டில் தனியார் வணிக வளாகம் உள்ளது. இங்கு ஏராளமான கடைகள் இயங்கி வருகிறது.

நேற்று நள்ளிரவு இங்கு வந்த மர்ம நபர்கள் வணிக வளாகத்தில் இருந்த ஸ்டூடியோ, பியூட்டி பார்லர், பேன்சி கடை ஆகியவற்றின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்தனர்.

அங்கு வைக்கப்பட்டு இருந்த பணம், லேப்-டாப் உள்ளிட்ட பொருட்களை திருடி சென்று விட்டனர். இன்று அதிகாலை கடையை திறக்க வந்த ஊழியர்கள் கடையின் பூட்டு உடைக்கப்பட்டு பொருட்கள் திருட்டு போய் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இது குறித்து ஊத்துக்குளி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் அங்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். திருட்டு போன பொருட்களின் மதிப்பு உடனடியாக தெரிய வில்லை.

இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News