செய்திகள்

கோவிலில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு

Published On 2018-12-30 17:50 GMT   |   Update On 2018-12-30 17:50 GMT
மெஞ்ஞானபுரம் அருகே கோவிலில் உண்டியலை உடைத்து அதில் இருந்த பணத்தை மர்மநபர்கள் திருடிச் சென்றனர்.
மெஞ்ஞானபுரம்:

மெஞ்ஞானபுரம் அருகே நங்கைமொழியில் இரட்டை சுடலைமாடசாமி மந்திரமூர்த்தி கோவில் உள்ளது. சம்பவத்தன்று நள்ளிரவில் கோவிலின் வெளிப்புற கதவின் பூட்டை மர்மநபர்கள் உடைத்து திறந்து உள்ளே நுழைந்தனர். பின்னர் கோவிலில் இருந்த உண்டியலை உடைத்து திறந்து, அதில் இருந்த பணத்தை திருடிச் சென்றனர்.

இதுகுறித்து கோவில் நிர்வாகியான மேல ராமசாமிபுரத்தைச் சேர்ந்த தங்கவேல் (வயது 77) அளித்த புகாரின்பேரில், மெஞ்ஞானபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கோவிலில் உண்டியலை உடைத்து பணத்தை திருடிய மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். 
Tags:    

Similar News