செய்திகள்

வெளிநாட்டில் வேலைக்கு அனுப்புவதாக கூறி ரூ.2 லட்சம் மோசடி - வாலிபர் கைது

Published On 2018-12-29 18:18 GMT   |   Update On 2018-12-29 18:18 GMT
வெளிநாட்டில் வேலைக்கு அனுப்புவதாக கூறி ரூ.2லட்சம் மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
சிவகங்கை:

புதுக்கோட்டை மாவட்டம் சுந்தரபட்டி புல்வயலை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 28). இவர் வெளிநாட்டு வேலைக்கு ஆட்களை அனுப்பிவருவதாக தெரிவித்துள்ளார். இதை நம்பிய மானாமதுரை அருகே உள்ள தெ.புதுக்கோட்டையை சேர்ந்த சத்தியராசு (37) என்பவர் சிங்கப்பூரில் வேலைக்கு அனுப்பி வைக்க கேட்டாராம்.

இதற்காக கடந்த ஆகஸ்டு மாதம் 2 தவணைகளில் ரூ.2 லட்சத்தை வங்கி கணக்கு மூலம் கிருஷ்ணமூர்த்திக்கு கொடுத்தாராம்.

அதையடுத்து நீண்ட நாட்கள் ஆகியும் சிங்கப்பூருக்கு வேலைக்கு அனுப்பவில்லையாம். மேலும் வாங்கிய பணத்தையும் திருப்பி தரவில்லையாம். இதுகுறித்து சத்தியராசு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரனிடம் புகார் அளித்தார்.

அவரது உத்தரவின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு துணை போலீஸ் சூப்பிரண்டு பாண்டிசெல்வம், இன்ஸ்பெக்டர் சாதுரமேஷ், சப்-இன்ஸ்பெக்டர் அருள்மொழிவர்மன், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வெள்ளச்சாமி, திருமுருகன் உள்ளிட்ட போலீசார் விசாரணை நடத்தி கிருஷ்ணமூர்த்தியை கைது செய்தனர்.
Tags:    

Similar News