செய்திகள்
பொன்னேரி அருகே ஆசிரியர் வீட்டில் நகை-பணம் கொள்ளை
பொன்னேரி அருகே அரசு பள்ளி ஆசிரியர் வீட்டின் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.
பொன்னேரி:
பொன்னேரியை அடுத்த தடப்பெரும்பாக்கம், அங்கம்மாள் நகரை சேர்ந்தவர் இளங்கோ. பெரும்பேடு அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
நேற்று காலை அவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் சென்னையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். மாலையில் திரும்பி வந்தபோது வீட்டின் கதவு பூட்டு உடைந்து கிடந்தது.
உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு ரூ.10 ஆயிரம் ரொக்கம், 2 பவுன் நகை, ¼ கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.
வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு மர்மநபர்கள் பட்டப்பகலில் கைவரிசை காட்டி உள்ளனர். எனவே இதில் ஈடுபட்டது அதே பகுதியை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று தெரிகிறது. இதுகுறித்து பொன்னேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பொன்னேரியை அடுத்த தடப்பெரும்பாக்கம், அங்கம்மாள் நகரை சேர்ந்தவர் இளங்கோ. பெரும்பேடு அரசு பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
நேற்று காலை அவர் வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் சென்னையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். மாலையில் திரும்பி வந்தபோது வீட்டின் கதவு பூட்டு உடைந்து கிடந்தது.
உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு ரூ.10 ஆயிரம் ரொக்கம், 2 பவுன் நகை, ¼ கிலோ வெள்ளி பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது.
வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்டு மர்மநபர்கள் பட்டப்பகலில் கைவரிசை காட்டி உள்ளனர். எனவே இதில் ஈடுபட்டது அதே பகுதியை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என்று தெரிகிறது. இதுகுறித்து பொன்னேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.