செய்திகள்

திருச்சியில் இன்று காலை திடீர் மழை

Published On 2018-12-22 16:06 GMT   |   Update On 2018-12-22 16:06 GMT
திருச்சியில் இன்று காலை திடீரென லேசான தூரலுடன் சாரல் மழை பெய்தது. பெண்கள் மழையில் நனையாமல் இருக்க சேலையாலும் சுடிதார் துப்பட்டாவாலும் தலையை மூடியபடி சென்றனர்.
திருச்சி:

திருச்சியில் தினமும்  காலையில் பனிமூட்டம் நிலவி வருகிறது. பகலில் வெயில் அடித்து வருகிறது. இந்த நிலையில் இன்று காலை  திடீரென லேசான தூரலுடன் சாரல் மழை பெய்தது.  

மேலும் வானமும் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. பின்னர் பகல் 12  மணியளவில் வெயில் அடிக்க ஆரம்பித்தது. திடீரென பெய்த மழையின் காரணமாக குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்தனர். திடீரென்று பெய்த மழையால் பொதுமக்கள் மழையில் நனைய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. பெண்கள் மழையில் நனையாமல் இருக்க  சேலையாலும் சுடிதார் துப்பட்டாவாலும் தலையை மூடியபடி சென்றனர். 
Tags:    

Similar News