செய்திகள்
புழல் அருகே இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செங்குன்றம்:
விருத்தாசலம் விளங்காட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர். இவர் மகள் சினேகா(18). இவர்கள் இருவரும் சென்னை ஓட்டேரியில் உள்ள துடைப்பம் கம்பெனியில் வேலை செய்து வந்தனர்.
சினேகாவுக்கு டஸ்ட் அலர்ஜி இருந்ததால் புழல் லட்சுமிபுரம் ஆதிலட்சுமி நகரில் உள்ள டாக்டர் தாமோதரன் என்பவரது வீட்டில் தங்கி இருந்தார். நேற்று சினேகா வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்தார். திடீரென அவர் துப்பட்டாவால் மின் விசிறியில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.