செய்திகள்

விழுப்புரம் அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை

Published On 2018-12-16 18:08 GMT   |   Update On 2018-12-16 18:08 GMT
விழுப்புரம் அருகே விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்டார்.
விழுப்புரம்:

விழுப்புரம் அருகே உள்ள கண்டம்பாக்கத்தை சேர்ந்தவர் முருகன் மனைவி அஞ்சலை (வயது 37). சம்பவத்தன்று இவர் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் விஷத்தை எடுத்து குடித்துவிட்டார்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்து பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று அதிகாலை இறந்தார். இவரின் தற்கொலைக்கான காரணம் குறித்து விழுப்புரம் மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News