செய்திகள்

வலங்கைமான் அருகே பள்ளி வேன் மோதி முதியவர் பலி

Published On 2018-12-15 17:45 GMT   |   Update On 2018-12-15 17:45 GMT
வலங்கைமான் அருகே பள்ளி வேன் மோதிய விபத்தில் முதியவர் உயிரிழந்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வலங்கைமான்:

வலங்கைமான் அருகே புளியக்குடி வாய்க்கால் கீழப்பாலம் பகுதியை சேர்ந்தவர் சூர்யமூர்த்தி (வயது 70). இவருக்கு திருமணமாகவில்லை. இந்த நிலையில் சம்பவத்தன்று வீட்டின் அருகே சாலையோரத்தில் இயற்கை உபாதைக்காக சென்றுள்ளார். அப்போது புளியக்குடியில் இருந்து வலங்கைமான் நோக்கி வந்த தனியார் பள்ளி வேன், சூர்யமூர்த்தி மீது மோதியது.

இதில் படுகாயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு வலங்கைமான் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளித்தனர். பின்னர் அங்கிருந்து அவரை மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.அங்கு சிகிச்சை பலனின்றி சூர்யமூர்த்தி உயிரிழந்தார்.

இதுகுறித்த புகாரின் பேரில் வலங்கைமான் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News