செய்திகள்
கடம்பூரில் ரூ.8 லட்சத்தில் புதிய நிழற்குடை- அமைச்சர் கடம்பூர் ராஜு திறந்து வைத்தார்
கயத்தாறு அருகே கடம்பூரில் ரூ.8 லட்சம் மதிப்பீட்டில் புதிய நிழற்குடை கட்டப்பட்டுள்ளது. இதை அமைச்சர் கடம்பூர் ராஜு திறந்து வைத்தார். #ministerkadamburraju
கயத்தாறு:
கயத்தாறு அருகே உள்ள கடம்பூர் ரெயில்வே பீடர் ரோட்டில் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 8 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக நிழற்குடை கட்டப்பட்டுள்ளது. இதை தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜு திறந்து வைத்து பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி, கோவில்பட்டி ஆர்.டி.ஓ. (பொறுப்பு) சங்கர நாராயணன், கயத்தாறு தாசில்தார் லிங்கராஜ், கடம்பூர் பேரூராட்சி முன்னாள் தலைவர் நாகராஜா, பேரூராட்சி நிர்வாக அலுவலர் ராதாகிருஷ்ணன், கயத்தாறு ஒன்றிய செயலாளர் வினோபாஜி, கடம்பூர் நகர செயலாளர் சமுத்திரராஜி, பேரவை ஒன்றிய செயலாளர் வண்டானம் கருப்பசாமி, கடம்பூர் பேரவை செயலாளர் மோகன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பாலமுருகன், நெல்லை ஆவின் தலைவர் என்.சின்னத்துரை, முன் னாள் எம்.எல்.ஏ.க்கள் மோகன் சின்னப்பன், ஈஸ்வர பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். #ministerkadamburraju