செய்திகள்

மதுரையில் 2 பெண்களிடம் நகை பறிப்பு

Published On 2018-12-15 10:16 GMT   |   Update On 2018-12-15 10:16 GMT
மதுரையில் 2 பெண்களிடம் நகை பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுரை:

மதுரை ஜெய்ஹிந்துபுரம், எம்.கே.புரம் மெயின்ரோட்டைச் சேர்ந்தவர் ராஜேஷ் குமார். இவரது மனைவி அனுசியா (வயது 21).

இவர் நேற்று இரவு 7 மணிக்கு அந்தப்பகுதியில் உள்ள கடைக்கு நடந்து சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் அனுசியா கழுத்தில் கிடந்த 3 பவுன் தங்கச்சங்கிலியை பறித்துச் சென்று விட்டனர்.

இது குறித்த புகாரின் பேரில் ஜெய்ஹிந்துபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

முத்துப்பட்டி ஆர்.எம். எஸ்.காலனி அழகுமலையான் நகரைச் சேர்ந்தவர் நெல்சன் (49). இவர், தனது மனைவியுடன் மோட்டார் சைக்கிளில் சென்றார்.

அப்போது ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர், நெல்சனின் மனைவி கழுத்தில் கிடந்த 4 பவுன் தங்கச்சங்கிலி மற்றும் செல்போனை பறித்துச் சென்றனர். இது குறித்து சுப்பிரமணியபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News