செய்திகள்

காரியாபட்டி-நரிக்குடி பகுதியில் ரூ.70 லட்சத்தில் புதிய கட்டிடங்கள்- ராஜேந்திரபாலாஜி திறந்து வைத்தார்

Published On 2018-12-14 14:11 GMT   |   Update On 2018-12-14 14:11 GMT
காரியாபட்டி மற்றும் நரிக்குடி பகுதியில் ரூ.70 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய கட்டிடத்தை பால்வளத்துறை அமைச்ச்ர ராஜேந்திரபாலாஜி திறந்து வைத்தார்.

காரியாபட்டி:

காரியாபட்டி ஒன்றியம் ஆவியூர் கிராமத்தில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் அம்மா பூங்கா மற்றும் உடற்பயிற்சி நிலையம் கட்டப்பட்டுள்ளது. இந்த பூங்கா மற்றும் உடற்பயிற்சி நிலையத்தையும், முக்கன்குளம் கிராமத்தில் ரூ.10 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட அங்கன் வாடி மைய கட்டிடம், நரிக்குடி ஒன்றியம் புல் வாய்க்கரை கிராமத்தில் ரூ.35 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட கால்நடை மருத்துவமனையையும் பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திறந்து வைத்தார்.

அப்போது பொதுமக்கள் கோரிக்கை மனுவை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் வழங்கினார். புல் வாய்க்கரை கிராமத்தில் சாலையில் ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக மனு கொடுத்தனர்.

உடனடியாக திருச்சுழி தாசில்தாரை அழைத்து ஆக்கிரமிப்பு செய்துள்ள இடத்தை பார்வையிட்டு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார்.

நிகழ்ச்சியில் கலெக்டர் சிவஞானம், மாவட்ட வருவாய் அலுவலர் உதயகுமார், அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் செல்லப்பா, ஒன்றிய செயலாளர்கள் ராமமூர்த்திராஜ், பூமிநாதன், மாவட்ட இலக் கிய அணி செயலாளர் தோப்பூர்முருகன், அ.தி.மு.க. பிரமுகர் தேவர், மாவட்ட ஆவியூர் ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ரவி, மாவட்ட பேரவை பொருளாளர் மச்சேஸ் வரன், நரிக்குடி ஒன்றிய இணைச்செயலாளர் அம்மன்பட்டி ரவிச்சந்திரன், நரிக்குடி ஒன்றிய பேரவை செயலாளர் தியாகராசன், ஒன்றிய எம்.ஜி.ஆர். இளைஞரணி இணைச் செயலாளர் குண்டு குமார், வக்கீல் ஆவியூர் ரமேஷ், முன்னாள் ஒன்றிய செயலாளர் அம்பலம், புல் வாய்க்கரை கூட்டுறவு வங்கி தலைவர் ராம சுப்பிரமணியன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News