செய்திகள்
புயலால் வீடு சேதம் - வேதாரண்யம் அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை
புயலால் வீடு சேதமடைந்ததால் வேதாரண்யம் அருகே விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.
வேதாரண்யம்:
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள மணியன்தீவு கிராமத்தை சேர்ந்தவர் ராசு (வயது48). விவசாயி. இவருடைய மனைவி சுமதி (40). இவர்கள் கூரை வீட்டில் வசித்து வந்தனர். இந்த கூரை வீடு, கஜா புயலினால் சேதமானது.
இதனால் ராசு, தனது வீட்டின் மீது தார்ப்பாயை போட்டு மூடி, குடும்பத்துடன் குடியிருந்து வந்தார்.
புயலால் வீடு சேதமாகி விட்டதே என்ற மனவேதனையுடன் ராசு இருந்து வந்தார். இதுபற்றி அவர் தனது உறவினர்களிடம் வருத்தமாக கூறியுள்ளார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று ராசு விஷத்தை குடித்தார். இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
நேற்று அதிகாலை அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து அவருடைய மனைவி சுமதி, வேதாரண்யம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகவேலு, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அகோரம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புயலில் வீடு சேதமடைந்ததால் ஏற்பட்ட மன வேதனையில் விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ராசுவுக்கு 4 மகள்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள மணியன்தீவு கிராமத்தை சேர்ந்தவர் ராசு (வயது48). விவசாயி. இவருடைய மனைவி சுமதி (40). இவர்கள் கூரை வீட்டில் வசித்து வந்தனர். இந்த கூரை வீடு, கஜா புயலினால் சேதமானது.
இதனால் ராசு, தனது வீட்டின் மீது தார்ப்பாயை போட்டு மூடி, குடும்பத்துடன் குடியிருந்து வந்தார்.
புயலால் வீடு சேதமாகி விட்டதே என்ற மனவேதனையுடன் ராசு இருந்து வந்தார். இதுபற்றி அவர் தனது உறவினர்களிடம் வருத்தமாக கூறியுள்ளார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று ராசு விஷத்தை குடித்தார். இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
நேற்று அதிகாலை அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து அவருடைய மனைவி சுமதி, வேதாரண்யம் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் முருகவேலு, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் அகோரம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புயலில் வீடு சேதமடைந்ததால் ஏற்பட்ட மன வேதனையில் விஷம் குடித்து விவசாயி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. ராசுவுக்கு 4 மகள்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.