செய்திகள்

வெம்பாக்கம் அருகே ஆட்டோ மோதி முதியவர் பலி

Published On 2018-12-11 11:30 GMT   |   Update On 2018-12-11 11:30 GMT
வெம்பாக்கம் அருகே ஆட்டோ மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்யாறு:

வெம்பாக்கம் அடுத்த பிரம்மதேசம் பகுதியை சேர்ந்தவர் ஆதிநாராயணன் (வயது 80). விவசாயி. இவர் நேற்று வீட்டின் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது பின்னால் வந்த லோடு ஆட்டோ முதியவர் மீது மோதியது. இதில் பலத்தகாயமடைந்த ஆதிநாராயணன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

இது குறித்து தகவலறிந்த மோரணம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டு செய்யாறு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News