செய்திகள்
தருமபுரி பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் கைது
தருமபுரி பகுதிகளில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
தருமபுரி:
தருமபுரி கொல்லங்கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் மாதேஸ்வரன். இவர் எஸ்.வி. ரோட்டில் பீடா கடை நடத்தி வருகிறார். மதேஸ்வரன் தனது கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தது தெரியவந்தது. இது குறித்து தருமபுரி டவுன் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
உடனே போலீசார் அங்கு சென்று மாதேஸ்வரனை கைது செய்தனர். அவரிடம் இருந்து 10 பாக்கெட்டு புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.
இது போன்று அரூர் அருகே கீழ்பாட்சா பேட்டை பகுதியில் கிருஷ்ணன் (53என்பவர் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்களை விற்பனை செய்தது தெரியவந்தது. அவரை அரூர் போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். அவரிடம் இருந்து 8 பாக்கெட்டு புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.