செய்திகள்

வனத்துறையினரை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Published On 2018-12-05 12:45 GMT   |   Update On 2018-12-05 12:45 GMT
தளி மற்றும் ஜவளகிரி பகுதிகளில் யானைக்கூட்டம் தினந்தோறும் வந்து விவசாய பயிர்களை நாசம் செய்து வருவதால் அதனை கட்டுப்படுத்தாத வனத்துறையை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தேன்கனிக்கோட்டை:

கர்நாடக மாநிலத்தில் இருந்து தேவர்பெட்டா வழியாக தளி மற்றும் ஜவளகிரி பகுதிகளில் தமிழக எல்லைக்குள் நுழைந்த யானைக்கூட்டம் தினந்தோறும் விவசாய பயிர்களை நாசம் செய்து வருகிறது. 

இந்த யானை கூட்டத்தை கட்டுப்படுத்தாத வனக துறையினரை கண்டித்தும், யானைகள் ஊருக்குள் வராதவாறு அகழிகள் வெட்டி யானை கூட்டத்தை கட்டுப்படுத்தவும், பயிர் சேதாரங்களுக்கு உரிய நஷ்டஈடு வழங்கக்கோரியும் தேன்கனிக்கோடடை பழைய பஸ் நிலையம் பக்கத்தில் உள்ள வனச்சரக அலுவலகத்தின் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளரும், சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான ராமச்சந்திரன் தலைமை வகித்தார். பகுதி செயலாளர் பூதட்டியப்பா முன்னிலை வகித்தார்.
Tags:    

Similar News