செய்திகள்

போடியில் திருமணமான 2 நாளில் பெண் மர்ம மரணம்

Published On 2018-12-05 10:19 GMT   |   Update On 2018-12-05 10:19 GMT
திருமணமான 2 நாளில் பழங்குடியின பெண் மர்மமான முறையில் இறந்தது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலசொக்கநாதபுரம்:

போடி அருகே சிறைக்காடு பழங்குடியினர் குடியிருப்பில் வசிப்பவர் வெள்ளைச்சாமி. இவரது மகள் சித்ரா (வயது19). இவருக்கும் போடி டி.வி.கே.கே.நகரை சேர்ந்த கார்த்திக் என்பவருக்கும் கடந்த 2 நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தபோது சித்ரா திடீரென இறந்துள்ளார். கார்த்திக் கண் விழித்து பார்த்தபோது மனைவி பிணமாக கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து போடி டவுன் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

போலீசார் விசாரணையில் சித்ராவிற்கு மனநோயும், சர்க்கரை நோயும் இருந்துள்ளது தெரிய வந்துள்ளது. மேலும் திருமணத்தன்று திடீரென பிரம்மை பிடித்தவர்போல் நடந்துகொண்டு கார்த்திக்கை கடுமையாக தாக்கி உள்ளார். இந்த நோய்க்கு சிகிச்சையும் அளிக்கப்பட்டு வந்தது. ஆனால் சித்ரா எவ்வாறு இறந்தார் என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். திருமணமாகி 2 நாளில் புதுப்பெண் இறந்ததால் உத்தமபாளையம் ஆர்.டி.ஓ. மேல் விசாரணைக்கும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

Tags:    

Similar News