செய்திகள்

திருவள்ளூர் அருகே 2 கடைகளை உடைத்து கொள்ளை

Published On 2018-11-30 09:54 GMT   |   Update On 2018-11-30 09:54 GMT
திருவள்ளூர் அருகே 2 கடைகளை உடைத்து கொள்ளையடித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவள்ளூர்:

திருவள்ளூர் அருகே காக்கலூர் பூங்கா நகர் உள்ளது. இங்கு சிமெண்ட் கடை வைத்திருப்பவர் செல்வராஜ். இவர் நேற்று இரவு கடையை பூட்டிவிட்டு சென்றார்.

இன்று காலை கடையை திறக்க வந்த போது பூட்டு உடைக்கப்பட்டு ‌ஷட்டர் திறந்து கிடந்தது. உள்ளே சென்று பார்த்த போது கல்லாவில் இருந்த 5 ஆயிரம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது.

இதே பகுதியில் உள்ள மாருதி நியூடவுனில் செல்போன் கடை வைத்திருப்பவர் பாலாஜி. இவருடைய கடையின் பூட்டும் உடைக்கப்பட்டிருந்தது.

இந்த கடையில் இருந்த ரூ.8 ஆயிரம் ரொக்கம், செல்போன் உதிரி பாகங்கள் ஆகியவற்றை கொள்ளையடித்து சென்று விட்டனர். இதன் மதிப்பு ரூ.15 ஆயிரம்.

இந்த இரண்டு கொள்ளை சம்பவங்கள் குறித்து திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்கு பதிவு செய்து, கொள்ளையர்களை தேடி வருகிறார்கள்.

Tags:    

Similar News