செய்திகள்

சென்னை விமானத்தில் இலங்கை பயணியிடம் ரூ.15 லட்சம் அமெரிக்க டாலர் பறிமுதல்

Published On 2018-11-29 08:39 GMT   |   Update On 2018-11-29 08:39 GMT
சென்னை விமான நிலையத்தில் குங்குமப்பூ, தங்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் இலங்கை பயணியிடம் இருந்து ரூ.15 லட்சம் அமெரிக்க டாலரையும் பறிமுதல் செய்தனர். #ChennaiAirport
ஆலந்தூர்:

துபாயில் இருந்து சென்னைக்கு நேற்று இரவு பயணிகள் விமானம் வந்தது. அதில் வந்தவர்களின் உடமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது சென்னையை சேர்ந்த 3 பேர் உரிய ஆவணங்கள் இன்றி 8 லேப்டாப், குங்குமப்பூ, வெளிநாட்டு சிகரெட் பாக்கெட்டுகள் ஆகியவற்றை கடத்தி வந்திருப்பது தெரியவந்தது.

சோதனையின்போது ஒரு வாலிபர் தனது உடலில் 50 கிராம் தங்கத்தை மறைத்து கடத்தி வந்திருந்தார். அனைத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.25 லட்சம் ஆகும்.

இதுதொடர்பாக சென்னையை சேர்ந்த 3 வாலிபர்களிடமும் சுங்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்க்ள.



சென்னையில் இருந்து இலங்கைக்கு இன்று காலை பயணிகள் விமானம் புறப்பட தயாராக இருந்தது. அதில் செல்ல வந்த இலங்கையை சேர்ந்த வாலிபரின் நடத்தையில் அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது.

அவரது பையை சோதனை செய்தபோது ரூ.15 லட்சம் மதிப்பிலான அமெரிக்க டாலர்கள் இருந்தன. இதற்கான ஆவணம் அவரிடம் இல்லை. இதையடுத்து அவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். #ChennaiAirPort
Tags:    

Similar News