செய்திகள்

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

Published On 2018-11-24 05:02 GMT   |   Update On 2018-11-24 05:02 GMT
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் மழை பெய்ய தொடங்கியதையடுத்து ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. #Hogenakkal
ஒகேனக்கல்:

கர்நாடக மாநிலத்தில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்ததால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 5 ஆயிரம் கனஅடிக்கு மேல் வந்து கொண்டிருந்தது. நேற்று முன்தினம் நீர்வரத்து 4600 கனஅடியாக சரிந்தது.

இந்த நிலையில் மீண்டும் மழை பெய்ய தொடங்கி கடந்த 2 தினங்களாக கர்நாடக-தமிழக எல்லை பகுதிகளிலும், கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களிலும் மழை பெய்தது. இதனால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து நேற்று 4900 கனஅடியாக அதிகரித்தது. இன்று மேலும் அதிகரித்து 5800 கனஅடியாக உயர்ந்தது.

தொடர்ந்து கர்நாடக- தமிழக எல்லையான பிலி குண்டுலுவில் நீர்வரத்தை மத்திய நீர்வள துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர். #Hogenakkal

Tags:    

Similar News