செய்திகள்

மிலாடி நபியன்று தடையை மீறி மது விற்பனை- 16 பேர் அதிரடி கைது

Published On 2018-11-22 12:29 GMT   |   Update On 2018-11-22 12:29 GMT
ஈரோடு மாவட்டத்தில் மிலாடி நபி விழாவையொட்டி சட்ட விரோதமாக மது விற்பனை செய்ததாக 16 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் விற்பனைக்கு வைத்திருந்த 141 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
ஈரோடு:

மிலாடி நபி விழாவையொட்டி ஈரோடு மாவட்டத்தில உள்ள டாஸ்மாக் கடைகள், பார் உள்ளிட்டவைகளுக்கு விடுமுறை அளித்து ஈரோடு கலெக்டர் கதிரவன் உத்தரவிட்டார்.

இதன்பேரில் நேற்று மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை விடப்பட்டிருந்தது. டாஸ்மாக்கடை விடுமுறையை பயன்படுத்தி அதிக லாபத்திற்கு மதுபானங்களை விற்பனை செய்வோர் மீது நடவடிக்கை எடுக்ககோரி ஈரோடு எஸ்பி சக்தி கணேசன் போலீசாருக்கு அறிவுறுத்தினார்.

இதன்பேரில் மதுவிலக்கு டிஎஸ்பி ரமேஷ் தலைமையிலான போலீசார், சட்ட ஒழுங்கு போலீசார் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சட்ட விரோதமாக மதுவிற்பனை செய்த 16 பேரை கைது செய்தனர். மேலும் அவர்கள் விற்பனைக்கு வைத்திருந்த 141 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். #tamilnews
Tags:    

Similar News